செவ்வாய், 28 நவம்பர், 2017

என்னவள்


என் வலைப்பதிவின் பதிவவள் ,

என் தீ கண்ட திரௌபதியும் அவள் !

காணகண்ட கண்ணகி அவள்,

நான் கனாக்கொண்ட கவிதைவள் !

நிலா மூடும் மேகம் அவள் ,

விழும் மழையின் தேகம் அவள் !

பிறைகாணா நிலவும் அவள்,

பிறர் காணா அழகின் சிலவும் அவள் !

கதிரவன் காண செழுக்கும் செந்நெல் கதிரவள் !

சினம்கொண்ட சிங்கம் அவள் ,

இனம்காணா அங்கம் அவள் !

தங்கம் செரிக்கும் அணியவள்,

என்கண் உவமை சேர்க்கும் அணி அவள் ~ என்னவள்

#வினித்_மணிமாறன்

2 கருத்துகள்: