வெள்ளி, 24 நவம்பர், 2017

பரணி - பெயர் கவிதை


உன் சிறுசிரிப்பும் ஒரு சிற்றிலக்கியம் !

சிதையா செம்மொழி செவியில் படர்கையில்,

கதையாய் கவிதையாய் வீழும் நாத்தாங்கி நீ !

என் நாளோங்கி, கதிரவன் வீழ,
ஏக்கம் தீர்க்கும் தனியூற்று நீ !

தமிழில் பலபொருள், ஒரு மொழி நீ !

கலகம் நிறைந்த இப்பாருளாகில்,
உன் பெயரின் பொருள் - என் உலகம் நீ !

#வினித் மணிமாறன்

பொருள் : பரணி என்ற சொல் .. தமிழில் ஒரு பல பொருள் ஒரு மொழி அதாவது ஒரே சொல் பல  பொருள்களை கொண்டது
நாதாங்கி - நட்சத்திரம் - பரணி
சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று
உலகம் என்ற பொருளிலும் வழங்க பெற்றது...

4 கருத்துகள்: