அன்னையின் கை தலையனையாக்கி,
கண்ணயர்ந்த நிரலின் நிழல் கனவுகள்,
கற்பனை கனவிலும் சித்திகரிதாய் சித்தப்பனை,
சித்தா என்றழைக்க தனிச்சிறசு நான் தரித்தேன்,
நீ பல்துலக்க என் கைபேசி கண்ணாடி,
நின் சுமந்து நான் நடக்க,
கடும் கோடையும் என் ஆடி,
உன் ஆசைகள் நிறைவேற,
மழலை மொழியில் நுரையேற,
மிதந்ததும் பறந்தது என் நாட்கள் !
நீர் குமிழியின் நிரமாற்றமாய்;
கடந்த மழலையும்,
என் மடியில் நீ கிடந்த நிழலையும்,
பிடிக்க முயன்ற பொழுதெல்லாம்
சுழற்ற முயன்றும் சுழல்கிறேன்,
காலமெனும் சக்கரமாய் !
#வினித்_மணிமாறன்
Wow thambi speechless, heading itself is just awesome
பதிலளிநீக்குநன்றி அண்ணி
நீக்கு