வியாழன், 15 மார்ச், 2018

விண் பொட்டு


நின் கண்ணிமைக்க கருமை அழகு,

பச்சையுடுத்தும் முழுமை அழகு,

சிரித்தால் மிளிரும் விண்பொட்டுகளால்,

உன்பெயர் பரணி என்றெழுத்தினானோ பிரம்மன் !

முதல்நாள், கர்வத்தின் காட்சி இவளென்றும்,

இதழ் கேட்க, என் சர்வத்தின் சாட்சியம் இவளென்றும்,

நினைத்து சுழன்ற நாட்கள்,

கடந்தும் நடந்ததுதான்;

பணிப்போர்த்தி உறையும் குளிரில்,

உறங்காமல் உரைத்த காதல்,

பலபிறை கடந்தும் தேயாதிருக்க,

நிலவை நான் அடைந்தும்,

பிளவா தென்றுரைப்பேனே !

#வினித்_மணிமாறன்

3 கருத்துகள்: