நின் கண்ணிமைக்க கருமை அழகு,
பச்சையுடுத்தும் முழுமை அழகு,
சிரித்தால் மிளிரும் விண்பொட்டுகளால்,
உன்பெயர் பரணி என்றெழுத்தினானோ பிரம்மன் !
முதல்நாள், கர்வத்தின் காட்சி இவளென்றும்,
இதழ் கேட்க, என் சர்வத்தின் சாட்சியம் இவளென்றும்,
நினைத்து சுழன்ற நாட்கள்,
கடந்தும் நடந்ததுதான்;
பணிப்போர்த்தி உறையும் குளிரில்,
உறங்காமல் உரைத்த காதல்,
பலபிறை கடந்தும் தேயாதிருக்க,
நிலவை நான் அடைந்தும்,
பிளவா தென்றுரைப்பேனே !
#வினித்_மணிமாறன்

Enga erunthu machiii epdiii laaam edukura semaaa maaa
பதிலளிநீக்குஎன்னடா அவமான படுத்துற
நீக்கு@Vinith_manimaran haha...... Once again thanks after a long time
பதிலளிநீக்கு