என் எழுத்துகள் என்னைப்போலவே தோற்க தொடங்கிவிட்டன..
வெற்றியென்றால் என்னவென்றே தெறியாமல் யாரேனும் இருக்க முடியுமா என்ற கேள்விக்கு பதில் வேண்டுமெனில், அக்கம் பக்கம் பாராமல், அண்டை பதிவை நாடாமல் என் முகத்தை நினைத்து கொள்ளுங்கள்.
எனது தோல்வி எத்தகையது என்று கேட்டீர்களானால், என் முகத்தை நினைத்து கொள்ளுங்கள் என்றவுடன்; சற்றும் யோசனையின்றி உங்களால் என் முகத்தை நினைவு கொள்ள முடியும்.
ஏனெனில் என்னை தெரிந்தவர்களையன்றி யாரும் இப்பதிவை படிக்கப்போவது இல்லை.
(ஆனால், இப்பொழுது இந்த பொன்முறுவல் சற்று அவசியமற்றது என்று தோன்றுகிறது. இருந்தாலும் பரவாயில்லை, சற்று சிரித்து கொள்ளுங்கள்.)
தோல்வி எப்படி ஒரு மனிதனை புரட்டி எடுத்தாலும், அவனது வாழ்வை, வாழ்வியல் நிகழ்வுகளை அதனால் சற்று நிதான படுத்த மட்டுமே முடியும்.
அந்த நிதான நொடிகளில் அந்த தோல்வியின் காரணிகள் அவனை/அவளை மென்மேலும் துன்புறுத்தி மகிழும்.
பச்சை பட்டாணியில் பசியாரி, சந்தோஷமாய் அது தனது வீடு என நினைத்து வாழும் காய்ப் புழு, பட்டாணியை உரித்து சுண்டலாக்க முற்படும் எஜமானன் கையில் சிக்கி தவிக்கும் நிலையை ஒத்திருக்கும்.
மரத்தில் இருந்து தொங்கி இறங்க முயல்கையில், யார் கண்ணிலோ பட்டு, தனது கூட்டை காட்டி கொடுத்து, எமதர்மன் சோப்பு தண்ணி கரைத்து ஊற்ற, சாவின் விளிம்பில் தவிக்கும் மொசுக்கட்டையின் நான்கு தலைமுறையின் வலியை ஒத்திருக்கலாம்.
கர்ணன் திரைப்படம் போல இந்த காட்சிகள் 1990 களுக்கு முந்தையை காலத்தில் நடந்தது அல்ல.
(இந்த நொடியை 2010க்கு முன் கிராமத்தில் வளர்ந்த 90 சதவிகிதம் பேர் பார்த்திருக்கலாம், தயவு கூர்ந்து அதை நினைத்து பார்த்து ; தங்களின் வலது கையால் இடது கையை மயிர் கூச்செறிய சொரியாதீர்கள்)
இவ்வாறு பல வலிகளை நாம் ஒப்பிட்டாலும், அந்த குட்டி மொசுக்கட்டை கொண்ருன்னி மனிதர்கள் கடக்கும் வரை சற்று காத்திருந்திருக்கலாம்.
நாம் நமது கதைக்கு வருவோம்.
நீங்கள் ஒருத்தியை/ ஒருவனை உண்மையாக விரும்பும் பொழுது, எப்படி அவளை/அவனை வெறுப்பீர்கள் ?
காரணங்கள் கோடி சொன்னாலும், அவளை நீங்கள் விரும்பியதும்; அவள் உங்களை விரும்பியதும் மட்டுமே உண்மை.
எங்கிருந்தாலும் வாழ்க என்று கோடிப்பேர் கூறினாலும், நமக்கு கிடைக்காதவள் யாருக்கும் கிடைக்க கூடாது; என்று எண்ணும் சிலரும் வாழத்தான் செய்கிறார்கள்.
அவள் கூறிய காரணங்கள் தான் என்னென்ன ?
உனக்கு வேலை இல்லை : இச்சமூகத்தில் படிக்கிற அனைவருக்கும் வேலை இருந்தால்தான் காதலிக்க வேண்டும், வேலை இருந்தால் தான் ஒருத்தியின் மீது ஆசைப்பட வேண்டும் என்ற எண்ணம் எனோ அவனுக்கு படிக்கும் காலத்தில் வரத் தவறிவிட்டது.
Second year போனான் முழு காலேஜும் அவன் controlக்கு வந்துச்சுன்னு; ஒரு மாஸ் பன்ச் போடலாம்னு ஆசையோட போனா, Class notes எடுக்க வச்சு, அதுலயும் கேள்வி கேட்டு ; கொக்கி குமார் கொமட்டுல குத்தி வெளிய தள்ளிட்டாரு.
சேரி உள்ள ஒக்காந்து தூங்குறதுக்கு, வெளிய போயி இயற்கையை ரசிப்போம்னு செவுத்துல சாஞ்சி நின்ன ரெண்டா நிமிஷம் மாப்ள சலீமும் வெளிய வந்தான். (இன்ஷா அல்லா : உன் கருணையே கருணை - Why Blood same blood)
அங்கேயும் இங்கேயும் வேடிக்கை பாக்கையில, Lateral entry பசங்களெல்லாம் induction முடிச்சு, அவங்க அவங்க class க்கு போறத பாத்து சலீமு சுட்டி காட்டுனான்.
அந்த கூடத்துல தான் அவளும் இருந்தா...
முதல் முதலில் அவளை பார்த்த பொழுதில் கூட, நான் பொறுப்பற்று வகுபறையின் வெளியில் தான் நின்று கொண்டிருந்தேன். (கொக்கி குமாரின் கோர தாக்குதலுக்கு பின்)
மஞ்சள் சுடிதார், கணகாம்பரப்பூ நீல நிற ஷூ என்று அவளது செலெக்ஷன் தான் எத்துனை வித்தியாசம் ! (அப்பொழுதே அவளது செலெக்ஷனில் எனது தரத்தை ஒப்பீடு செய்திருக்கலாம்)
காட்டுக்குள் காலேஜ் கட்டியது கவித்துவம் ஏற்றத்தான் என்று, பினாமியை திட்டும் பொழுது தோன்றவில்லை. (இயற்கையை இயற்கை எய்தாமல் வைத்தமைக்கு நன்றி)
கடுங்கூட்டத்திற்கு நடுவிலும் ஏய் துஷந்தா என்று Song போடாத சகுந்தலாவாக அவள் மட்டுமே அவன் கண்ணில் பட்டுக் கொண்டிருந்தாள்.
அதுக்கப்புறம் என்ன, எங்க போனாலும் அவ அங்கேயெல்லாம் இருக்குற மாதிரி ஒரு இனம்புரியாத மயக்கம். (இவரே தேடி போவாராம், ஆனா விதிப்படி அந்தபொண்ணும் அங்க வந்துச்சுன்னு நெனச்சுகுடுவாராம்)
உணவு இடைவேளையில் கூட்டமா நிக்கையில, கேன்டீன்ல வந்து ப்ரூட் பவுல் வாங்கயில, ஒரு Close up தரிசனம் தர.
FRUITY குடிக்கிறப்போ, பன்னீர் சோடா குடிச்ச மாதிரி ஜிவ்வுன்னு ஒரு இனம் புரியாத அனுபவம்.
வயசு கோளாறு, இது காதலா இருக்குமோன்னு நினைக்க வச்சுது.
சாயங்காலம் எல்லாரும் கூட்டமா காலேஜ் பஸ்ஸை நோக்கி நடைபோட, search engine active ஆகிடுச்சு, filter yellow colour னு, excel filter கணக்கா filter போட்டு அடுத்த மூனா நிமிஷத்துல அவளாண்ட வந்து நின்னுச்சு.
அதே 23 பஸ்.
NON SYNC லே ரன் ஆகுற இந்த 19 வயசு OS க்கு இந்த UPDATE, HANDLE பண்ண கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு.
எல்லாத்தையும் ஆண்டவன் மேல பாரமா போட்டுட்டு, பக்கத்துல இருந்த பாலாஜி கிட்ட கேட்டான்;
மச்சி யாருடா அவன்னு...
நம்ம கூட காலேஜ் படிக்கிற பயலுகளுக்கே உள்ள அதுப்பு,
பொண்ணு யாருனு கேட்டா ;
ஆறு வருஷமா அரியர் எழுதுற செந்திலோட சொந்த கார பொண்ணு, அது மட்டும் இல்லாம நம்ம Final Year படிக்கிற சிவசந்திரனோட ஆளுன்னு எடுத்த ஒடனே; கும்பகோணம் - தஞ்சாவூர் வழியில உள்ள speed breaker மாதிரி ஒரு பத்து பன்னெண்ட அடுக்குனான்.
துயில் கொள் பாலாஜின்னு அவனை தோள்ள போட்டு தட்டி கொடுத்து தூங்க வச்சுட்டான்
பொதுவா 1 மணி நேரத்துல வீட்டுக்கு போற பஸ்ல அன்னைக்கு என்னமோ எட்டு மணி நேரம் பயணிக்கிற மாதிரியே ஒரு நெனப்பு.
அம்புட்டு தான், அடுத்த ஒரு வாரம் தீவிரமா Class notes எடுக்க ஆரம்பிச்சாச்சு, அதே வேகத்துல போயிருந்தா, second year லேர்ந்து அவன் university topper ஆகிருப்பான்.
(இவிங்க பாடம் நடத்துற அழகுல)
ஆனாலும் அந்த வாரங்கள்ல நம்ம சகுந்தலா கண்ல படாம இல்ல,
மண்டைகுள்ள, பன்னிர் சோடா உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும், பன்னிர் சோடா உயிரை கொல்லும் அப்டின்னு ஹஸ்கி வாய்ஸ் மட்டும் தான் கேக்கல ; அம்புட்டு சோடா குடிச்சுறுப்பான் நம்ம பய.
இப்டி பல முறை கேன்டீன் சந்திப்புகளுக்கு பிறகு என்னதான் ஆச்சு,.. விரைவில் சந்திப்போம்..
தொடரும்...

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக