வியாழன், 11 ஜூன், 2020

மரணத்துக்கு அப்பால் - அதிகாரம் ஒன்று - பூவரசன்





பாவி; சூத்திரக்காரண்; துரோகி; கொலைக்காரன்; கொடியவன் என்றெல்லாம் உங்களால் பழிசுமத்தப்பட்ட ஒருவனை ஒரு நொடியில் மாகானாகவும், வீரனாகவும் மாற்றி அவன் செய்த வீர செயல்களை ; அவன் செய்த நல்ல காரியங்களை மட்டும் உங்கள் நினைவில் ஏற்றி - எந்த நாவினால் அவனை தூற்றினீர்களோ அதே நாவினால் அவனை பாராட்ட செய்யும் திறம் வாய்ந்தது !

இதற்குமேல் நீங்கள் படிக்க போகும் ஒவ்வொரு கதையும் பாகமும் என் கண்ணோட்டத்தில் மரணத்தால் உயர்ந்தவர்கள் அல்லது மாற்றம் கொண்டவர்கள் அல்லது மரணத்திற்கு அப்பால் வாழ்பவர்களை பற்றிய சிறு துணுக்குகள் ஆகும்.

உங்கள் பார்வையில் அவை மாறுபடலாம்,
என் பார்வை தவறானதாகவும் தோன்றலாம்.

அதோன்றால்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல...

நான் எடுக்கும் ஆயுதம் தன் பயணத்தில் தனிமனித சுதந்திரத்தோடு ஒன்றாக பயணிக்கட்டும்.

அதிகாரம் 1 : பூவரசன்

கல்லூரி படிப்பின் பின், பலப்பேர் காலூறி; நாமும் சொந்த காலில் நின்றுவிட மாட்டோமா என்ற கனவெல்லாம் இங்கேதான் நிறைவேற போகிறது என்ற நிம்மதியோடு, ஒரு தொழிற்சாலையில் என் பணியை தொடங்கினேன்.

அது ஒரு இருசக்கர வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை.

அங்கு நான் எதிர்கால வாகனங்களின் தயாரிப்பு துறையில் பொறியாளனாக பணிசெயதேன்,

அதே துறையில் இயந்திர இயக்குனராக பணி செய்த இளைஞர் தான் பூவரசன்.

பூவரசன் ஒரு சுதந்திர இளைஞன், கவலையற்ற மனிதன், எங்களின் பார்வையில் அவரது கரு முகத்தில் வெள்ளை முத்துக்களை உதிர்காத நாளில்லை.

பூவரசனை பொறுத்த மட்டும், சிரிப்பு ஒன்றே போதும். எனக்கு இன்றும் நினைவில் வருவது அவரது சிரிப்பு ஒன்றுதான்.

அந்த தொழிற்சாலையில், பூவரசனின் உயர் அதிகாரிகளின் பார்வையில், அவர் ஒரு விளையாட்டு இளைஞன், கண்பாணிப்பற்ற இடத்தில் அவர் ஒரு ஊதாரி.

தங்களின் தனி முன்னேற்றத்திற்காக எண்ணற்ற இளைஞர்களை செம்மறி ஆடுகளாக மாற்ற நினைக்கும் அதிகாரிகளுக்கு என்றும் பூவரசனின் சிரிப்பு வெறுப்பின் ஊற்றாக தான் இருந்திருக்கும்.

ஒரு வருடம் ஓயாது அவர்களுக்காக உழைத்த பிறகு அந்த தொழிற்சாலையில் ஓரு பெருங்குழப்பம் நிகழ்ந்து வர; தன்னை நிரந்தர பணியமர்த்த வேண்டி எல்லோரும் தினம் தினம் போராடி கொண்டிருக்க, படித்தும் அங்கு ஒருவருடம் ஓயாது உழைத்தும், என் வேலை அவர்களின் சதுரங்க ஆட்டத்தில் சிதறிப்போக; அத்தொழிற்சாலையிலிருந்து நான் விடைபெறும் நாள் வர.

கடைசீயாக ஒரு நாள், என் வருகை பதிவேட்டில் என் கடைசி கையப்பம் இடும் பொழுது என் பேனா முனையில் இருட்டிட்ட நிழல் பூவரசனின் நிழல்.

அப்பொழுதும் அதே சிரிப்பு, சிரிப்போடு பூவரசன் அங்கிருந்த பாதுகாவலரிடம் சொல்லி கொண்டிருந்தார்.

அவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், வீட்டில் சொல்லாமல் அவர் காதலித்த பெண்ணை திருமணம் செய்து கொண்டிருந்தார் என்றும், வேலை நிரந்தரம் ஆன பின்பு வீட்டில் சொல்லி சம்மதம் கேட்க போவதாகவும் சொல்லி கொண்டிருந்தார்.

எங்கு போனாலும் தன் தராதரம் பாக்கும் நரிகூட்ட உழைப்பாளிகள், தன் உயர் அதிகாரிகளுக்கு சொம்படித்து கொண்டும்; பாதுகாவலர்களை மதிக்காமல் அவர்கள் இவர்களுக்கு மரியாதை செலுத்துகிறார்களா என்று ஓர கண்ணில் ஓட்டம் விடும் கூட்டம்.

ஆனால் பூவரசன் இரண்டாம் ரகம், யாரை பார்த்தாலும் சிரிப்பை சிதற விடுவார்.

பார்க்க தமிழ் சினிமாக்களில் வரும் வில்லன் போல காட்சியளித்தாலும் பேசியவர்களுக்கு தான் தெரியும், அவர் ஒரு கதாநாயகன் என்று.

அன்று கடைசீயாக பூவரசனை பார்த்த பின்பு, முகபுத்தகத்திலும் நான் பூவரசனை பார்த்ததுண்டு, தலையில் ஓரு குரங்கு குல்லா, பல்சர் பைக்கில் வீட்டில் இருந்து கீழே இறங்க அப்படியே படமாக்கி தன் அடையாளமாக வைத்திருப்பார்.

பார்த்தவுடன் அதிர வைக்கும் வகையில் இருக்கும், ஏன் என்றால் அவரை சீருடையிலே பார்த்து பழகிய கண்களுக்கு அது ஒரு விருந்து.

இவ்வாறாக இருந்த ஒரு நபரை பற்றி எந்த வித செய்தியும் இல்லாமல் போக, 

ஒரு ஆண்டிற்கு பிறகு, எங்கோ தத்தித்தாவி வேறு ஒரு தொழிற்சாலையின் பணியில் நான் இருக்க.

ஒரு ஞாயிறு காலை, வாட்சப் ஸ்டேட்டஸ் இரயில்களில் பயணித்த பொழுது,

பலரும் நயன்தாராவுக்கு பிறந்தநாள் வாழ்த்து, ஜானி டெப் க்கு பிறந்தநாள் வாழ்த்து என்று பக்கத்து வீட்டு காரனின் பிறந்தநாளுக்கு அவனுக்கு வாழ்த்து சொல்லுவது போல விட்ட இரயில்களுக்கு நடுவில், என்னை அதிர வைத்த இரயில் பெட்டி பூவரசனின் மரணத்துக்காக அவரது சபநண்பர்கள் விட்டிருந்த இரயில்கள்.

ஆம், பூவரசன் இறந்து விட்டார்.
அவரது அதே பல்சரில் பயணித்த பொழுது விபத்துக்குள்ளானாராம்.

அமைதி கொள்ளட்டும் பூவரசினின் ஆன்மா.

எனக்கு பூவரசன் யாரென்று தெரியாது. தெரிந்ததெல்லாம் அவரது சிரிப்பு ஒன்றுதான், அது என்னை இவ்வளவு எழுத செய்யும் வல்லமை வாய்ந்தது.

பூவரசன் இருக்கும் வரை அவரை தூற்றிய பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் செய்தியை, ஈரக்கைக்குட்டைகளோடு சுத்திக்கொண்டிருந்தார்கள்.

அவர்களில் எத்தனை பேர், பூவரசனின் சிரிப்பை வெறுதிருப்பார்கள் ?

அவர்களில் எத்தனை பேர்களுக்கு பூவரசனை நினைவிருக்கும் ?

இல்லை அவர்களில் வாழ்வில் பூவரசன் ஒரு வழிப்போக்கனாக இருக்க, நான் மட்டும் பூவரசனின் நினைவுகளோடு ஊஞ்சலாடுகிறேனா ?

மே 17, பூவரசனின் பிறந்தநாள் - அவர் இறந்தாலும் அவருடைய முகபுத்தகத்தில் பிறந்தநாள் வாழ்த்துகள் குமிய தவறவில்லை; அவரது உண்மையான நண்பர்களிடமிருந்து.

சிலரிடம் இருந்து மிஸ் யூ மச்சான் என்றும் சில போஸ்டர்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

இருக்கட்டும் பூவரசா, உன்னிடம் நான் வெறுப்பவர்கள் முன் எப்படி சிரித்து வாழ வேண்டும் என்று கற்றுக்கொண்டேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக