திங்கள், 24 செப்டம்பர், 2018

இதுவும் கடந்து போகும்




சிற்றலையில் நம்கால் நனைக்க,

சிறுகுடையுள் கை பிணைத்து,

கடல்மண் மெத்தென ஒரு கால் விழுங்க,

என் மறுகால் கிறுக்கும் ஒரு மீீமிசை நீ !

அலை அடித்து அழித்தாலும்,

அழித்தடம் மாறும் முன்,

என் வழித்தட பயணத்தின்,

ஜன்னல் ஓர நொடிகளில்,

மின்னல் தோன்றா இடி முழக்கம் நீ !

கடக்கும் கடினமான கடிகார நொடிகளில்...

ஒவ்வொரு நொடியும் நொடித்தாலும்,

உன்னை கடியாத கவிஞன் நான் !

#வினித்_மணிமாறன்

3 கருத்துகள்: