காதல் கார்மேகமாய் சூழ,
கற்பனை மழையாய் தூர,
நனைகிறேன் நினைவதன் நிழலிலே...
குடையென அவள் விடை,
என் தலையதை துடைக்க;
மடையனாய் சிரிக்கிறேன்,
அவளையே வெறிக்கிறேன்,
சுற்றம் மறக்கிறேன்..
நிலவும் பொறுமை இழந்து, நொடியில் பொறாமை அடைந்தது,
என்னவளின் தேகம் கண்டு..
மேகத்தை இடை மறித்து ,
தன் இடை புதைத்தது,
மஞ்சள் பூசி மெருகேற்ற முயற்சித்து,
தோல்வியில் கிரகம் பெயர்ந்தது...
#வினித் மணிமாறன்
Hmmm nadathu super;)
பதிலளிநீக்குHaha, நன்றி ...
நீக்கு