மனமேடை பத்தடியில் தானிருக்க,
வரிசையில் பரிசோடு நானிருக்க,
பத்தாண்டு முன்னிருந்த எம்பத்தினியை நான் கண்டேன்,
பட்டினியில் நானில்லை, இருந்தும் மயக்கம்வர,
பத்து நொடிகுள்ளே, பத்தாண்டை கடனிழுத்தேன்,
அசைந்தவள் மேடையேற அசைவிழந்து நானமர்ந்தேன் !
இத்துனை ஆண்டாயும் அவள் நாணம் மாறவில்லை,
அவள் மீதான என் நாட்டம் மட்டும் மாறிடுமோ ?
பத்தடி ஏறியவள் சிரித்து நகர்ந்ததெல்லாம்,
ஆயிரம் வாரணங்கள் என் நெஞ்சை தகர்த்திடவோ ?
இத்தனை ஆண்டாய் மறைத்து நகர்ந்த நான்,
இன்று மட்டும் பேசிடவா போகிறேன் ?
ஓரமாய் நின்று என்னோடு காதலையும் இளைப்பாற்றினேன் !
வழக்கம்போல !
#வினித் மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக