ஏதோ ஒரு நிலையில் நாம் எல்லோரும் யாரோ ஒருவரை காதலிக்கிறோம். அக்காதல் மதம் இனம் மொழி நிறம் என அத்தனை பாகுபாடுகளை கடந்து நிறைவேறுகிறது.
அதை வெற்றி என நினைத்து கொண்டாட தொடங்குகிறோம். காலச்சக்கரமும் அதன் சுழற்சியை தொடங்குகிறது. நாம் காதலிக்கும் நபரோடு நாம் காதல் கொள்ளும் முன் அவர் நம் எதிரியாக இருந்திருக்கலாம்.
அந்த எதிர்ப்பு காதலாக மாறி இருக்கலாம் இல்லை எதிற்பாகவே முடிந்திருக்கலாம்.
ஆனால் நாம் அவரை அல்லது அவளை காதலிக்க தொடரும் பொழுதில் நம் எதிரியாக இருந்த அதே நபரை எதிர்பார்ப்பது எதைகைய முட்டாள் தனம்.
இதற்கு முன் இருந்த தலைமுறையில் காதலர்கள் எப்போதும் ஒரு உரிமைப்போரில் இருந்தார்கள். அவ ஏன் உன் கிட்ட பேசுறா இவன் ஏன் உன் கிட்ட பேசுறான் என்பது போன்ற சீண்டல்கள் அவர்களை இணைத்து வைத்திருந்தது, பிரிவின் காரணக்கோடுகளை அவர்கள் பக்கம் கீராமல் பார்த்து கொண்டது.
ஆனால் இவ்வகையான உரிமைப்போர் இல்லாமல் இக்கால காதலர்கள் அதை அனுபவ மூப்பு (MATURITY) என பிதற்றி கொண்டு காதலுக்காக போராட்டத்தை தொடரும் முன் காதலுக்குள் போராடி பிரிக்க நினைக்கும் பெற்றோர்களுக்கு வழிவகை செய்கிறார்கள்.
நல்ல வேளையாக லதாவும் ராமும் அக்கால காதலர்களாக இருந்தது கதைக்கும் கதைப்பானுக்கும் நல்லதாய் போயிற்று !
கதையை தொடர்வோம் :
நீயாடி இப்படி தைரியமா பேசுற ?
என்னா ஒரு தெளிவு, இத மட்டும் நம்ம ஸ்கூல்ல படிச்ச சுதாலாம் கேட்டு இருந்தான்னு வையு, உன்னைய ஸ்கூல் படிக்கிறப்போ கிண்டல் பண்ணினதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு மன்னிப்பு கேட்டு, உன் கால்ல விழுந்துருப்பா.
சரி, ராம் வீட்ல என்னாச்சு அதை சொல்லு என்று காரியத்தில் கண்ணாக இருந்தாள் லதா.
அதை ஏன் கேக்குற, அது ஒரு சரியான காமெடி என்று சொல்லி சிரிக்க தொடங்கினாள் கயல்.
சிரிக்க சிரிக்க இவளுக்கு என்ன ஆகியிருக்கும் என்று ஆர்வமாக இருந்தது.
சிரிக்கிறதை நிப்பாட்டிட்டு சொல்லுடி கதைய என்றாள் லதா.
அதுவா, தலைவரு அவங்க அப்பா அம்மா கிட்ட சேர்த்து வச்சு சொன்னா சரி வராதுனு; தனி தனியா attack பண்ணிருக்காப்புடி.
ஆனா Attack பாண்டியோட attack ரெண்டுமே புஸ் ஆகிருச்சாம், நல்ல வேலைக்கு அவங்க அண்ணனை பிரமாஸ்தரமா பயன் படுத்தி சரியான இடம் பாத்து அடிச்சு ok வாங்குற level க்கு எடுத்துட்டு போயிருக்காரு.
தெளிவா சொல்லுடி என்று கடுகடுத்தாள் லதா.
சொல்றேன் இரு என்று சொல்லி தண்ணீர் தொட்டியின் சில்லென்ற சுவற்றில் சாய்ந்து ; ஹே நிலாவ பாறேன் செமயா இருக்குல்ல என்று லதாவை சூரியனாக்கி சுரண்டி பார்த்தாள் கயல்.
கயல் உன்னைய கொல்ல போறேன் பாரு இப்போ என்றாள் லதா.
கயல் தன் கதையை தொடர்ந்தாள், ராம் காலைல எழுந்தானாம், அவங்க அப்பா வீட்ல இல்லையாம், சரி இதான் சரியான நேரம் அப்டின்னு முடிவு பண்ணி, அவங்க அம்மா கிட்ட நேர்ல போயி, அம்மா எனக்கு எப்போமா கல்யாணம் பண்ணி வைபீங்க அப்டின்னு கேட்டானாம்.
உனக்கு இன்னிக்கி சந்திராஷ்டமம் ஒழுங்கா ஓடிடு அப்டின்னு சொன்னாங்களாம் அம்மா.
சந்திராஷ்டமமா அப்டின்னா என்றாள் லதா.
இந்த அறியாமையை பயன் படுத்தி கொள்ள சற்றும் தயங்கவில்லை கயல்.
அதுவா சந்திராஷ்டமம்னா, சின்ன வயசுலே எதாச்சும் பொண்ணுக்கு கட்டி வைக்கிறேன் அப்டின்னு சத்தியம் பண்ணி குடுத்துடுவாங்க, அந்த நாள் மாசத்துல என்னைக்கி வந்தாலும் அன்னக்கி சத்தியத்தை மீறி பேச கூடாதுன்னு; கல்யாணத்தை பத்தி பேச மாட்டாங்க என்று சிரிப்பை அடக்கி கயல் சொல்லி முடிப்பதற்குள்; லதா தனது யோசிக்கும் திறனால் நிலாவை தொட்டு இருந்தாள்.
இதெல்லாம் ராம் எனக்கு சொல்லவே இல்லையே, அவனுக்கு வேற 2 மாமா பொண்ணுங்க, 3 அத்தை பொண்ணுங்க. எல்லாமே 7 1/2 சனி. எனக்கும் அதுங்களுக்கும் ஒத்து கூட வராது. இவன யாருக்குனு சத்தியம் பண்ணி வச்சாங்களோ தெரியலயே என்று பொலம்பத்தொடங்க.
அய்யய, யார்ரா இவ என்று நினைத்த கயல். நீ ஒரு வெலக்கெண்ணை, என்ன சொன்னாலும் நம்புற போ என்று சொல்லி சிரிக்க தொடங்கினாள் கயல்.
கடுப்பில் கயல் கழுத்தை பிடித்து, ஒழுங்கு மரியாதையா நடந்ததை மட்டும் சொல்லு இல்லைனா, உன்ன கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போக கூட தயங்க மாட்டேன்டி என்று களத்தை SERIOUS MODE க்கு மாத்தினாள் லதா.
இதற்கிடையில், மகன் அல்லது மகள் எதையேனும் SERIOUS MODE ல் பேச வரும் பொழுது உங்க அப்பா இங்க இல்லை, அவர் வந்ததும் பேசிக்கலாம் அல்லது இதை பற்றி பேச இது சரியான நேரம் இல்லை அல்லது நான் கேட்க தயாராக இல்லை என்ற அத்தனை பதிலையும் ஒன்று சேர சொல்ல பாட்டிகளால் பயிற்சி அளிக்க பட்ட தாய்மார்கள் பயன் படுத்தும் தாரக மந்திரம் "உனக்கு இன்னிக்கி சந்திராஷ்டமம், அமைதியா இரு" என்பதாகும். நீங்கள் எதையோ SERIOUS ஆக சொல்ல வருகிறீர்கள் என்றால் அதை ஒரு மாதத்திற்கு முன்பாகவே கணிக்கும் வல்லமை வாய்ந்த பெற்றோர்களும் இவ்விந்திய துணைக்கண்டத்தில் மட்டுமே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வறிவை திறம்பட பயன்படுத்தி இருந்தால், பல IT நிறுவனங்களின் CEO, CFO வாக நமது அம்மாக்கள் இருந்திருந்தாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.
பிறகு ராம் சொன்ன நிலவரத்தை லதாவிடம் தொடர்ந்தாள் கயல்.
கல்யாணமா அதுகென்ன அவசரம் என்றாள் உமா.
மா, சும்மா காமெடி பண்ணாதீங்க.
இத்தனை வருஷம் எவ்ளோ கஷ்ட பட்டு இந்த வேலைய வாங்கிருக்கேன்னு உங்களுக்கு தெரியும்.
சரி விடு மாமா கிட்ட சொல்லி பொண்ணு பாக்க START பண்ண சொல்றேன் என்றாள் உமா.
"SUBSCRIPTION இல்லாத அக்கால TAMIL MATRIMONY தாய் மாமன்கள்"
உடனே உங்க அண்ணன் கிட்ட போயி நின்னுடுனும்.
எனக்கு என்ன புடிக்கும் என்ன புடிக்காது, என்ன வேணும் வேணாம் எதுவும் அவருக்கு தெரியாது.
நம்ம சாதிக்காரன் பொண்ணு, நம்ம தூரத்து சொந்தம் அப்டின்னு எதயாச்சும் அவரு ALREADY லிஸ்ட் போட்டு வச்சிருப்பாரு. அவரோட INKI PINKI PONKI ல எதாச்சும் ஒரு பொண்ண எதுவுமே தெரியாம நான் OKEY சொல்லனுமா என்று வெடித்தான்.
எனக்கு ஒரு பொண்ண புடிச்சு இருக்கு, 10 வருஷமா தெரியும்.
BDS பண்ணிட்டு பல் டாக்டரா இருக்கா என்று ராம் சொல்லி முடிப்பதற்குள். உன்னையும் ஒரு பொண்ணு லவ் பண்ணுதாடா என்று கடுப்பேத்தும் விதத்தில் சிரிப்புடன் உமா கேட்க.
என்ன JOKE பன்றியா என்று சொல்லி உள்ளே நுழைந்தார் செல்வம்.
இவரு எங்கேர்ந்து வந்தாரு என்று எண்ணி சுதாரித்த ராம்.
எந்த விதமான பதிலுமின்றி தன் அறைக்கு சென்று கதவை மடார் என்று அடித்து தாழிட்டான்.
நமக்காக யாரும் வந்து பேச மாட்டார்கள் நாம் தான் நமக்காக பேச வேண்டும் என்பதை உணர்ந்தவளாய் அடுத்த 5 நிமிடத்தில் தன் அறையை விட்டு வெளியே வந்தான்.
இங்க பாருங்க, நான் என் வாழ்க்கைல இது வரைக்கும் எவ்வளவோ கஷ்ட பட்டுட்டேன். இது வரைக்கும் எனக்கு அமைஞ்ச எல்லாத்துக்கு பின்னாடியும் என்னோட உழைப்பும் உங்களோட தியாகமும் இருக்கு.
நானோ ராஜேஷோ எந்த பொருளையும் கேட்டு உங்க கிட்ட அடம் புடிச்சதே இல்ல, ஏன்னா உங்க கஷ்டம் எங்களுக்கு தெரியும் எங்கள எப்படியாச்சும் படிக்க வச்சுடனும்னு மட்டும் தான் நீங்க நினைச்சீங்க, அத செய்ய எல்லா வழிலையும் போராடவும் செஞ்சீங்க.
உங்களை பாத்து இவங்க எங்க நல்லா வாழ்ந்துட போறாங்க நம்ம கால்ல தான் வந்து விழனும்ன்னு நெனச்ச சொந்த காரங்க முன்னாடி, ஊரு காரங்க முன்னாடி வாழ்ந்து காட்டுனீங்க.
ராஜேஷ் படிச்சான் வேலை தேடினான், கஷ்ட பட்டான், இந்த வீட்டை கட்டினான், நீங்க பாத்து வச்ச பொண்ண கல்யாணம் பண்ணினான்; அவன் தன்னோட வாழ்கையை சென்னைல வாழுறான்.
அவனுக்கு அவன் குடும்பத்துல என்ன பிரெட்சன, அவங்க சந்தோசமா இருக்காங்களா, அவன் பிள்ளைய அவன் எப்டி வளக்குறான் அப்டின்னு எதையும் நீங்க அவன் கூட இருந்து பாக்கல.
அவன் தான் அவன் வாழ்கையை வாழுறான். அவன் அந்த வாழ்கையை புடிச்சு வாழுறானோ இல்லையோ அது அவனுக்கு மட்டும் தான் வெளிச்சம்.
நான் என்ன சம்பாரிச்சாலும், மாட மாளிகைல வாழ்ந்தாலும், கூரை வீட்டுல வாழ்ந்தாலும், எப்போ இந்த பொண்ணோட வாழ்ந்தா என் வாழ்க்கை இப்படி இருந்துருக்காதோ அப்டின்னு நினைக்கிறேனோ அப்போவே இத்தனை வருஷமா நான் போராடி ஜெயிச்ச அத்தனையும் தோல்வியா மாறிடும்.
இப்போ வரைக்கும் என் வெற்றிக்கு காரணமா தெரியிற நீங்க என் தோல்விக்கு வித்திட்டவங்கனு நினைக்க தோணும்.
அப்படி ஒரு வாழ்க்கைய தான் நான் வாழ்னும்ன்னா சொல்லுங்க, நாம் எந்த வேலைக்கும் போகல, கல்யாணம் பண்ணிக்கல உங்க விருப்பப்படி உங்க கைய எதிர்ப்பார்த்தே வாழ்ந்துட்டு போயிடுறேன்.
ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சுக்கோங்க, எந்த சொந்தக்காரங்களுக்காக, எனக்கு புடிச்ச வாழ்க்கைய அமைக்க கூடாதுனு நினைக்கிறீங்களோ அவங்க நினைக்கிறது செல்வம் குடும்பம் நல்லா இருக்கணும் ஆனா என் குடும்பத்த விட நல்லா இருந்திட கூடாது அப்டிங்குறது தான் என்று ஆஸ்கார் பேச்சை பேசி சடசட வென வீட்டை விட்டு வெளியேறினான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக