கோபம் - ஒரு நிமிடத்தில் ஒரு உறவை முறிக்கும் வல்லமை பெற்றது .
ஒரு நொடியில் ஒருவர் மீதான மரியாதயை குறைத்து பலவருட நம்பிக்கையை முறித்து - நன்கு தெரிந்த உணர்வாலியை அந்நியனாக்கும் திறம் வாய்ந்தது.
கோபத்தின் வெளிப்பாட்டில் வரவு மன நிம்மதி எனில், இழப்பு ஏராளம்.
ஒரு பொருளை கோவத்தில் உடைத்து, கோபத்தின் தனிவில் அதை நீங்கள் ஒட்டவைக்க எவ்வளவு முயன்றாலும், அதில் உள்ள பள்ளங்கள், வெடிப்புகள் காலமும் சுமக்கும்.
அப்படி ஒரு கோபம் தான் என் மீது எனக்கே ஏற்பட்டு, இப்பெரும் கதையை எழுத என்னை முதொடுத்தி கொள்ளவிடாமல் தடுத்து வைத்திருந்தது.
அம்மனப்பாட்டில் நான் இக்கதையை எழுதி இருந்தால், அது இக்கதைக்கும் இதை முழுமையாக படித்த 10-15 நபர்களின் நம்பிக்கைக்கும் நான் இழைக்கும் துரோகமாக அமைந்திருக்கும்.
இப்பொழுது இதை தொடர வேண்டும் என்று என்னை உத்வேகப் படுத்திய கதைப்பிரியர்களுக்கு நன்றி !
தனது காதலை லதா அவளது தந்தையிடம் சொல்லி அவர் என்ன பதிலளிப்பார் என்று காத்திருந்த தருணம், அடுப்படியில் இருந்து பறந்து வந்தது ஜல்லிக்கரண்டி, இதை எதிர் பாராத லதா, திரும்பி பார்க்க எத்தனிக்கும் நொடியில், JOHN CENA "U CAN'T SEE ME" என்று பறந்து வந்தது பிளாஸ்டிக் குடம். அந்த குடம் அடித்து BOUNCE ஆகிய உடன், TAN TAN TAN என்ற WWE MATCH STARTING BELL அடிக்காத குறையுடன் பாய்ந்து வந்த ரேவதி, 4 BIG SHOW SLAP உடன் ஒரு SUPER MAN PUNCH விட்டாள். இதையெல்லாம் தாங்க முடியாமல் தரையில் துவண்டு விழுந்து அழ தொடங்கினாள் லதா.
மயங்கிய பிளேயரை அடிக்க கூடாதென்ற ஆகம விதியை காக்க நினைக்கும் WWE REFEREEE போல, ரேவதி நிறுத்து என்று ரிங்குக்குள் வந்தார் சிவராமன். (அதாவது லதாவோட அப்பா)
அவ இப்போ என்ன சொல்லிட்டான்னு, நீ தையதக்கானு குதிக்கிற ? 1000 இருந்தாலும் அவ நம்ப பொண்ணு, அவ ஒருத்தர விறும்புறா, அதை நம்ம கிட்ட தைரியமா வந்து சொல்லிருக்கா; இதுல என்ன தப்பிருக்கு ? இதே அவ வெளில சுத்துறத பாத்துட்டு யாரோ ஒருத்தவங்க நம்ம கிட்ட சொல்லி இருந்தா ? அப்படியே கொண்ணு போட்டுருப்பேன் என்றாள் ரேவதி.
உனக்கு புத்தி கெட்டு போச்சு, கோபத்துல என்ன பேசுறோம்னு தெரியாம பேசாத என்றார்.
இத அவ மறைக்கணும், நம்ம விருப்பம் இல்லாம கல்யாணம் பண்ணனும் அப்டின்னு யோசிச்சு இருந்தா, ஊரு உலகத்துல ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு வீட்டு வாசல்ல மாலையும் கழுத்துமா நிக்கிற அநேக பேர் மாதிரி நின்னு, நம்ம மானத்தை வாங்கி இருப்பா. எதோ நம்ம வளர்த்த விதம் நல்லா இருக்கு அதுனால நம்ம கிட்ட வந்து அவ மனசுல பட்டத்தை சொல்ற அளவுக்கு சுதந்திரம் இருக்குனு நம்பிக்கையோட நம்ம கிட்ட வந்து சொல்லி இருக்கா.
இதுக்கு நம்ம அவளுக்கு சரியான பதில் சொல்லனும், அவ உணர்ச்சிக்கு மரியாத கொடுக்கனும் என்று சொல்லி லதாவையும் ரேவதியையும் பதட்டமற்ற நிலைக்கு கொண்டு சென்று. அடிவாங்கி, அழுது துவண்டு கிடந்த லதாவை எழுப்பி, அவள் கண்ணில் வழிந்த கண்ணீரை துடைத்து, சொல்லுமா பையன் என்ன பண்றான், என்ன பேரு, என்ன ஊரு, பூர்விகம்லாம் எப்படி என்று கேட்டார்.
ஒருவரின் சாதியை தெரிந்து கொள்ள இந்த பழந்தலைமுறை என்னென்ன கேள்விகளை உபயோகிக்கிறது !?
நீங்க சைவமா ? நீங்க மட்டும் தானா, இல்ல பரம்பரையே சாப்ட மாட்டீங்களா ? தம்பிக்கு என்ன ஊரு ?
ஊரு பேர கேட்ட அடுத்த நொடி, அங்க இந்த ஆளுங்க அதிகமாச்சே !?
சாமிநாத பிள்ளைய தெரியுமா ? அவரு எங்க வகையறா தான் ;
உங்க குலதெய்வம் ? வீரனா ?! அப்போ மாமிசம் படைப்பாலே !
உங்க தாத்தா பேரு ? பெயரை சொன்னால், அதில் ஜாதி பெயர் வருதான்னு பாத்துட்டு, முழு பெயரை சொல்லுங்க,
முழு பெயரே அருணாச்சலம் தானா ?
அனைத்தையும் மீறி, நீங்களும் அவர்களின் ஜாதியாக இருக்கும் பட்சத்தில், உங்களை பார்த்த உடனே நெனச்சேன், நீங்க நம்ம ஆளுங்க தான்னு !
எதுக்குடா இந்த மானம் கெட்ட பிழைப்பு ?
இப்படியாக பல வழிகளை கையாளும் பெருசுங்க எப்பொதான் திருந்துமோ தெரியல.
ஒருவரை வேற்றுமை படுத்த ஜாதி, குளம், கோத்திரம், மூத்திரம் என அனைத்தையும் பயன் படுத்தி அடுத்த 5 வருஷத்திலோ 10 வருஷத்திலோ இவங்க மண்டைய
போட்டுடுவாங்க ! ஆனா இவங்களோட வேற்றுமையால உருவான தீண்டாமை, நம்மை நமது உயிர் நண்பனிடம் இருந்து பிரிக்கும், பிடித்த பெண்ணுடன் ஒரு வாழ்வை வாழ விடாமல் காலத்துக்கும் ஆராத வடுவை பொறிக்கும்.
இந்த கருத்து ஊசி இப்போ தேவைதானான்னு கேட்காதீங்க, அப்பொப்போ கதைக்கு இடையில் நானும் கொஞ்சம் போலம்பல்களை கக்கிகொள்கிறேன்.
பூர்வீகமாக அப்டின்னா என்றாள் லதா !
அதான்மா பையனோட அப்பா அம்மா என்ன பண்றாங்க ? என்ன ஊரு அதெல்லாம் என்றார் சிவராமர்.
லதா உடனே அடுக்க தொடங்கினாள் ; பையன் பேரு ராம கிருஷ்ணன், அப்பா பேரு செல்வராஜ் அம்மா பேரு சித்ரா. அவங்களுக்கு இவன் ஒரே பையன்.
உங்களுக்கு அவன நல்லா தெரியும் இங்கதான் அவன் அவனோட மாமா வீட்ல தங்கி படிச்சான் ஒரு 7-8 வருஷம் முன்னாடி என்றாள் லதா.
ராம கிருஷ்ணனா ? அந்த லொட லொடன்னு பேசிட்டே இருப்பானே அவனா ? என்றாள் ரேவதி.
அஞ்சாங்கிலாஸ் குழந்தை ஐஸ்கிரீமை பார்ப்பது போல கண்ணுல பல்ப்பெரிய தன் தாய் பக்கம் திரும்பி, கங்கா சந்திரமுகியா மாறினாள்.
அவங்க அம்மா முகத்தை பார்த்வுடன் வாங்கிய அடி நினைவுக்கு வந்ததோ என்னமோ, மீண்டும் இருண்டது.
பிறகு மீண்டும் தொடங்கினாள் லதா, ராம் இப்போ INDIAN ARMY ல OFFICER'S CATEGORY ல LIEUTENANT அஹ் இருக்கான். இப்போதைக்கு சென்னை OTA ல இருக்கான், POSTING எங்கே வரும்னு தெரியலனு சொன்னான்.
அவனுக்கு POSTING வந்தா எங்க இருப்பான்னு தெரியாது, நீங்க வேற தீவிரமா மாப்பிள்ளை தெடுறீங்கங்குறதுனால, எனக்கு வேற வழி தெரியல என்றாள் லதா.
அதெல்லாம் இருக்கட்டும் அவங்க வீட்டுக்கு இதெல்லாம் தெரியுமா, இதெல்லாம் ஒத்துப்பாங்களா என்றார் சிவராமர்.
அவனும் இன்னைக்கு வீட்ல சொல்ல போறதா சொன்னான். என்ன ஆச்சுன்னு சாயுங்காலம் சொல்றதா சொன்னான் என்றாள் லதா.
ஒரு அமைதி நிலவியது. அதை உடைக்கும் விதத்தில், எனக்கு ராம் கூட வாழ்ந்தா வாழ்கை நல்லா இருக்கும்னு தோணுது. 10 வருஷமா அவனுக்காக காத்திருக்கேன். எனக்கோ அவனுக்கோ பெத்தவங்கள எதிர்த்து ஒரு கல்யாணம் பண்ணிகிறதுல விருப்பம் இல்ல என்று கூறி குடு குடுவன எழுந்து தன் அறைக்குள் சென்று தாழிட்டு கொண்டாள்.
லதா தனது வாழ்வில் இப்படி ஒரு தைரியத்தை எப்பொழுதும் பெற்றதில்லை. அம்மா அப்பா என்ன சொல்லுவார்கள் என்ற ஆவளை தாண்டி, வாங்கிய அடியும், ராம் வீட்டில் என்ன ஆனது என்ற பயமும், கண்ணில் காய்ந்து படர்ந்த உப்பு படலமும் அவளை நித்திரைக்கு தள்ளியது.
மாலை நேரம் எப்போது வரும் என்ற ஏக்கம் அவளை தொந்தரவு செய்து கொண்டிருந்த நேரம், லதாவின் தோழி கயல் வந்திருப்பதாக ரேவதி சத்தம் போட்டு கதவை தட்ட லதா அலறி அடித்து கதவை திறந்தாள்.
ஒரு நிமிஷம் கயல், நான் மூஞ்சி கழுவிட்டு வந்துடறேன் என்று கூறி, பின் லதா கயலுடன் வந்து சோபாவில் அமர்ந்தாள்.
என்ன லதா செம தூக்கம் போல என்று கிண்டலாக கேட்டு, லதாவின் பெற்றோர் எங்கே என்பதை நோட்டம் விட்டு, மொட்ட மாடிக்கு போவோமா என்றாள் கயல்.
அதற்குள் கிட்சனில் இருந்து வெளியே வந்த ரேவதி, இரும்மா காபி போட்டிருக்கேன், வெயில் வேற உண்ணம் தனியல கொஞ்சம் நேரம் கழிச்சு போங்க என்று கூறி கிட்சனுக்குள் நுழைந்தாள்.
இந்த வாசகத்தின் நோக்கத்தை உண்மையாக புறிந்தவளாக லதா. உஷ் ! என்று கூறி சற்று அமைதியாக சொல் என்று செய்கை காட்டினாள். பிறகு சத்தமாக ஆமாம் எனக்கும் சற்று சோம்பலாக இருக்கு இங்கேயே பேசலாம் என்றாள் லதா.
கயல் வந்த வேலையை தொடங்கினாள், கிசு கிசு வென ராம் போன் பண்ணினான், அவன் வீட்ல சொல்லிட்டானம், எதும் பிரட்சனை இல்லையாம். உனக்கு என்னாச்சுன்னு பாத்துட்டு வர சொன்னான் என்றாள்.
இதற்கிடையில், ரேவதி சுட சுட காப்பியுடன் வந்து இருவருக்கும் எதிரில் அமர்ந்து கொண்டாள்.
ரேவதி என்ன பேசிட்டு இருந்தீங்க என்று இயல்பாய் கேட்க, படபடத்து, வியர்வை குளியலுக்கு உள்ளானாள் கயல்.
அது அவ காலேஜ் கதைம்மா என்றாள் லதா.
என்னமா அப்பா அம்மா லாம் எப்டி இருக்காங்க?
வேலை எல்லாம் எப்டி போகுது ? எங்களுக்கு கல்யாண சாப்பாடு போட போற என்று பல கேள்விகளை அடுக்கினாள்.
அப்பா அம்மா FINE AUNTY. நான் வேலைக்கு போகல, அப்பாக்கு கடைல உதவி பண்ணிகிட்டும், அம்மா க்கு சமயகட்டுல உதவி பண்ணிட்டும் இருக்கேன். கல்யாண சோறு தானே போட்டுட்டா போச்சு.வீட்ல மாப்பிள்ளை பாத்துட்டு இருக்காங்க AUNTY என்றாள் கயல்.
நல்லா இருந்தா சந்தோஷம்மா, முன்னலாம் அடிக்கடி வருவ, இப்பொலாம் ஆளே பாக்க முடியல. நாங்களும் லதாக்கு வரன் பாத்துட்டு தான்மா இருக்கோம். ஆனா எந்த மாப்பிள்ளையை பாத்தாலும், இது சரி இல்லை, அது சரியில்லங்குறா என்றாள் ரேவதி.
அப்புறம் ? என் FRIEND என்ன சாதாரண ஆளா ? அவளுக்கு என்ன வேணும்னு அதெல்லாம் CORRECT ah CHOOSE பண்ணுவா AUNTY என்றாள் கயல்.
அடுத்த நொடி ரேவதியின் முகம் மாறியது.
(Naanga na na na ! Pappa pan ! என்று THUG LIFE MUSIC போட்டு கண்ணுல கண்ணாடி, வாயில சுருட்டு, கழுத்துல செயின் என்று CG EFFECTS ஓடு கயலை சித்திகரித்து பார்த்தாள் லதா)
இதற்குள் ஆரி குடிக்கும் பதத்தை அடைந்த காப்பியை கல்ப் என்று குடித்து முடித்தாள் கயல்.
ரேவதிக்கு இது புரியாமல் இல்லை, உடனடியாக எந்த விட தாமதமும் இன்றி, கயலுக்கு பதிலடி தர தயாரானாள். இப்போ உள்ள பசங்க எல்லாம் எங்க CORRECT AH CHOOSE பண்ணுது ? கல்யாணம் பண்ணி மூணாவது நாளே அது சரி இல்ல இது சரி இல்லனு கண்ண கசக்கிட்டு வந்து நிக்கிதுங்க. இதுங்க ஆசைக்காக எல்லாத்தையும் ஒத்துகிட்ட பெத்தவங்க, சந்தி சிரிச்சு நிக்கிறாங்க என்றாள் ரேவதி.
மீண்டும் ஒரு THUG LIFE REPLY தர தயாரானாள் கயல்.
தன்னொட மகளோட, மகனோட சந்தோஷத்துக்காகன்னு யோசிச்சு இப்போ உள்ள பெத்தவங்க எதையும் செய்யுறதில்லையே AUNTY ?! அந்த சொந்தக்காரன் என்ன நினைப்பான், இந்த சாதிக்காரன் என்ன நினைப்பான், அப்டி இப்டினு யோசிச்சு, பெத்த புள்ளைங்க ஆச பட்ட வாழ்கையை அவங்களுக்கு கடைக்க விடாம பண்ணி. அவங்க அத்தனை வருஷம் யோசிச்சு முதல் முதல்ல தனக்கு இது வேணும் அப்டின்னு நிலையா நின்ன ஒரே முடிவும் தப்புனு அவங்களுக்கு காட்டிட்டு, அடுத்த 10 வருஷமோ 20 வருஷமோ; என் புள்ள நான் எடுத்த முடிவால தான் இப்படி இருக்கான்னு நெனச்சு மோட்சம் அடையிற பெத்தவங்களுக்கு இடையில, நம்ம ஏன் இந்த முடிவ எடுத்தோம், வேற பையன் பாத்துருக்ககணுமோ, அவள் ஆசைக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கணுமோன்னு வருத்த படுற பெத்தவங்களும் இருக்காங்க AUNTY. அதெல்லாம் உடுங்க, காலத்துக்கும் மனசுல ஒருத்தனை நெனச்சுட்டு, ஒருத்தனோட வாழுற பொண்ணுங்க நிலமைய யோசிச்சு பாக்குறது இல்லையே சில பெத்தவங்க என்று பட படவென பட்டாசாய் வெடித்தாள் கயல்.
ரேவதி திக்கு முக்காடி போனாள். இந்த நிலையில் கயலை அள்ளி அணைத்து உச்சி முகர்ந்து, யாருடி நீ ? எங்க இருந்த இத்தனை வருஷமா என்று கேட்கும் அளவுக்கு ஆச்சரியப்பட்டு உறைந்திருந்தாள் லதா.
சரி வா நம்ம மாடிக்கு போவோம் என்று ரேவதியை காப்பாத்தி, அவளை இழுத்து கொண்டு மாடிக்கு சென்றாள் லதா.
Theedhum nandrum pirate therapy vaaraa... kaadhal enbadhu thaervu seivadhu alla... oru unarvu... yevaraiyum maatravum naerpada vaazhavum katru thrum... adhanai unarndhaal yevarum jaadhi, inam, mozhi paarka thevai illaamal aagividum... everyone must trust the due process enum porulai vediththu sidharavitta kayaking paaththiram kandu viyakkiren...
பதிலளிநீக்கு*pirar thara vaaraa pirate therapy aaga auto correct maatri vittadhu 😅
பதிலளிநீக்கு