சாதி .. சாதியியம் ..
தம்பி என்ன ஆளுங்க
?
நீங்க சைவமா ? நீங்க மட்டும் தானா இல்ல குடும்பமே அப்படியா
?
ஐய்யரா இல்ல பிராமினா ?
என்ன ருதிராக்ஷம்லாம் போட்டு இருக்கீங்க ?
உங்க பூர்வீகம் ? உங்க வகையறா என்ன ?
உங்க தாத்தா பேரு ?
சிறிதும் யோசனை இன்றி, அருணாச்சலம்
என்று நீங்கள் கூற, அருணாச்சலம் மட்டும் தானா என்று அவர்கள் கேட்க (உங்க
பாட்டிக்கு எத்தனை புருஷன் என்று கேட்க தூண்டும் அளவுக்கு கோவம் வந்தாலும்)
உடனடியாக அவர்கள் முழு பெயரை சொல்லுங்க தம்பி, என்பார்கள் !
இப்படியெல்லாம் உங்களை நோக்கி பாயும் கேள்விக் கணைகள்
தேடும் ஒரே தகவல்;
உன் ஜாதி என்ன ? என்பது மட்டுமே !
சிறுவயதில் பல முறை நேரடியாகவும் மறைமுகமாகவும் நமது
ஜாதியின் உயர்வால் பல பெரியவர்கள் நமது நட்பு வட்டாரத்தை சல்லடையிட்டுருப்பார்கள்
.
அப்பொழுது புரியவில்லை ஒரு தொடற்சங்கலியின் முதல் இணைப்பு
அங்கே தொடங்குகிறது என்று.
நாம் சிறுவயதில் விளையாடி பழக முற்பட்ட நபர்களிடம் அதற்கு
பின் நேரில் பார்த்து நலம் விசாரிக்க கூட தகுதியற்றவர்கள் என்ற ஏழ்மை நிலைக்கு
தள்ளபட்டோம் என்பதுதான் உண்மை .
அவர்களுக்கான இட ஒதுக்கீடு, அவர்களுக்கான அரசாங்க சலுகைகள்
ஒருவருக்கு கசக்கும் பட்சத்தில், இந்த கசப்பின் விதை உங்களின் விளையாட்டு
பருவத்தில் உங்களின் மீது திணித்து விதைக்கபட்டது என்பதை உணரப்போவதே இல்லை.
இதைப்பற்றி மேலும் பேசி, நீங்கள் உண்ண காத்திருக்கும்
பாதாம் கொட்டைகளுக்கு நடுவில் வேப்பங்கொட்டையாக இருக்க விருப்பமின்றி, உங்களுக்கு
திணிக்க பட்ட விஷ விதைகளை கோயில் கும்பங்களில் விட்டுவிட்டு, அடுத்த தலைமுறைக்கு
அதன் வாசமின்றி வளர்ப்பீர்கள் என்ற நம்பிக்கையோடு கதைக்குள் செல்கிறேன்.
இங்க பாரு லதா, நீன்னு இல்ல வேற எந்த பொண்ணு என்னய காதலிக்கிறேன்னு வந்து நின்னு இருந்தாலும், நான் உனக்கு சொன்ன
பதிலை தான் சொல்லி இருப்பேன். எனக்கு ஒரு பொண்ண புடிச்சு இருந்தாலும், என்னோட எதிர் காலத்தை யோசிக்காம இருந்துருக்க மாட்டேன்.
இப்போ கடைக்க போற சுகத்துக்கு ஆசைப்பட்டு, எதிர் காலத்துல கஷ்டபட கூடாதுன்னு ரொம்ப தெளிவா இருக்கேன். அதுனால நீயா ஏதாச்சும் யோசிச்சு உன்ன நீயே குழப்பிக்காத. உனக்கு என்ன வேணும்ன்னு தெளிவா இரு.
சரி இப்போ கிளம்பு, வீட்ல தேடுவாங்க என்று கூறி அங்கிருந்து புறப்பட தயாரானான் ராமன்; லதா என்ன நினைத்தாள் என்று தெரியவில்லை, அவளும் ராமனோடு நடக்கலானாள். சிறு தூரம் கடந்த பிறகு, யாராச்சும் பாத்தா என்ன நினைப்பாங்க, நீ கிளம்பு என்றான் ராமன்.
ராமன் சொன்ன அடுத்த நொடி, எதையும் சிந்திக்காமல், நினைச்சா எனக்கென்ன என்றாள் லதா. எதையும் யோசிக்காம நீ ஊருக்கு போ ராம்; உன் வாழ்க்கைல பெரிய ஆளா, நீ நினைச்ச மாதிரி வர்றதுக்கான வழியப்பாரு. என்ன பத்தி யோசிக்காத நானும் எனக்காக இல்லனாலும், உனக்காக முன்னேற பாக்குறேன், என்று சொல்லி முடிப்பதற்குள்; பேருந்து நிலையம் அடைந்திருந்தார்கள்.
அவ்விடம் அடைந்து, மீண்டும் ஒரு முறை இருவரும், ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் பார்த்து நின்றார்கள். சட்டென்று, லதா ராமை அணைத்து கொண்டு, “உன்ன நான் ரொம்ப இக்கட்டான சூழ்நிலைல நிறுத்திட்டேன், நீ எதையும் யோசிக்காத, உன்ன யாராலையும் தடுக்க முடியாது. நீ உன்னோட கனவ நோக்கி ஓடு, நானும் ஓடுறேன், ஓடி ஓஞ்சி, உனக்கு குடும்பம்ன்னு ஒன்னு வேணும்னு யோசிக்கிறப்போ நான் உனக்காக இருப்பேன்” என்றாள்.
அணைத்த கைகள் அணைத்தவாரே இருந்தது, யாரோ வருவது போல உணர்ந்து இருவரும் சற்று நகர்ந்தார்கள். ராமனின் மனம் படபடத்து கொண்டிருந்தது. அணைத்த நொடிகள் நீட்டிக்க வேண்டும் என்ற ஆசை ஒரு பக்கம் இருந்தது, இதை சொல்லி, அவனது கனவுகளுக்கு அவளும் ; அவளது கனவுகளுக்கு அவனும் தடையாக அமைந்திட கூடாது என்பதை உணர்ந்து நகர்ந்தான்.
ஒரு நொடி அமைதிக்கு பிறகு, ராமன் மனதை உணர்ந்த சீதையாக லதா முகப் பொலிவுடன், ராம் கண்களை பார்க்க முயன்றாள். அவனோ இத்தனை ஆண்டுகளில் இல்லாத விதத்தில் அவள் கண்களை பார்க்க தடுமாறினான்.
பொறுமையாக பேச தொடங்கினாள் லதா ; ராம், ஏதும் நெனச்சு மனச போட்டு குழப்பிக்காத, உனக்கு என்னலாம் யோசனை வரும்னு எனக்கு நல்லா தெரியும், நீ சொல்லாம அமைதியா இருந்தா கூட என்னால உணர முடியும்.
உன் கனவுகளை நோக்கி ஓடு, அப்டி எங்கயாவது உனக்கு சோர்ந்து போயி நிக்கிற மாதிரி இருந்தாலோ, வாழ்க்கைல ஒரு பிடித்தம் இல்லாத மாதிரி தோணுனாலோ, இந்த கடிதாசிய படி, என்று சொல்லி கையில் வைதிருந்த மடித்த காகிதத்தை அவனிடம் கொடுத்தாள். எந்த மறுப்பும் இன்றி ராம் அதை பெற்றுக்கொண்டான்.
மீண்டும் ஒரு அமைதிக்கு பிறகு, CONDUCTOR கூவல் கேட்டது, கும்பகோணம்... ஆனா பாயிண்ட் டூ பாயிண்ட், எடைல ஏதாச்சும் ஊருல எறங்கணும்னா, இங்கயே எறங்கீடுங்க.. பஸ் அங்கலாம் நீக்காது.. இதை கேட்ட ராம் பேருந்து நோக்கி திரும்பினான், பிறகு மீண்டும் திரும்பி லாதாவை பார்த்தான். பிறகு வேகமாக ஓடி பேருந்தில் ஏறி, கடைசீ வருசையின் ஜன்னலை அடைந்து அமர்ந்தான். காலியான பேருந்து பயணத்துக்கு தயாரானது, இவனது கனத்த இதயத்தின் வலுவால் சற்று பொறுமையாக நகர்ந்தது.
அந்த பேருந்து நகராமல் இருந்திருந்தால், இவனது காதல் அந்த கனமே மொழிபெயர்ந்திருக்கும்.
விதி வலியதுதான்..
அடுத்த நொடி லதா நின்ற இடத்தை நோக்கினான், அங்கே அவள் இல்லை, இறங்கி தேடலாம் என்ற எண்ணம் வந்தது, அடுத்த நொடி, லதாவின் குரல் கேட்டது, “ராம்” .. என்று..
மிதிவண்டியில் இவனது ஜன்னல் பக்கம், மெதுவாக நகர்ந்து வந்து கொண்டு இருந்தாள். பேருந்தும் லதாவின் மிதிவண்டியும் ஒத்திசைவில் நகர்ந்து கொண்டிருந்தது. சற்று நொடியில், தொடர்பு விசை அதிகமாகி, ராம் லதாவிடம் இருந்து தூரம் நகர தொடங்கினான்.. பேருந்து வலது புறம் திரும்ப, அவளால் முடிந்த வேகத்தில் லதா இவனை தொடர முயல்வதை ராம் கண்டான்.
அடுத்தடுத்த நொடியில் எல்லாம் மாறியது, காட்சிகள் மாறின, காற்றின் வாசம் மாறியது, கன்னம் வரண்டது, ராம் லதாவின் நினைவுகளுடன் வேகமான பேருந்திலிருந்து, மெதுவியக்கத்தில் காட்சிகளை கண்டுகொண்டே லதாவின் நினைவுகளை ஓட்ட தொடங்கி, ஏக்கம் பொங்க கண்
கலங்க தொடங்கினான். அப்பொழுது... தம்பி டிக்கெட் என்று வந்து நின்றார் CONDUCTOR.
இப்படி கதை சொல்லும் பொழுதே, ராம் லதாவின் கண்களை பார்த்து கொண்டிருந்தார், லதாவின் கண்ணில் கண்ணீருடன் நின்று கொண்டிருந்தாள். நாம் அந்த CONDUCTOR போல கல்நெஞ்சகாரணாக இருக்க கூடாது என்று எண்ணி வேலன் அமைதி கொண்டான்.
சிறிது நேர அமைதிக்கு பிறகு, வேலன் பெருமகிழ்ச்சியுடன் கேட்டான், சொல்லுங்க அப்பா அந்த லெட்டர் எங்க இருக்கு ? அதுல என்ன எழுதி இருந்துச்சி ? நீங்க எப்போ அத படிச்சிங்க ? என்று கேள்விகளை அடுக்கினான்.
பொறு வரேன் ! என்று எழுந்து நகர்ந்தார் ராமர்.. அடுத்த மூன்றாம் நிமிடம் கையில் ஒரு பையுடன் வந்து சேர்ந்தார், அதில் இருந்த அந்த காலம் கழிந்த மஞ்சளேரிய காகிதத்தை எடுத்தார்.
அதை பொசுக்கென்று
பிடிங்கி, நிமிர்ந்து எழுந்து ஆர்வத்துடன் படிக்க தொடங்கினான் வேலன்;
ராம் ! – இந்த பெயரை எத்தனை இடத்துல எழுதிருப்பேன்னு எனக்கும் இந்த பேனா முனைக்கும் தான் தெரியும். அப்படி எழுதுன எல்லா இடத்துலயும், பக்கத்துல என்னோட பெயரும் இருந்துருக்கும் !
அப்படியே கடைசி வரைக்கும் இருக்கனும்ங்குர ஆச தான் அப்டி எழுத வச்சதோ என்னமோ !
எனக்கு உன்ன புடிக்கும்..
எவ்ளோ புடிக்கும்னா, எங்க போனாலும் யார் கிட்ட பேசுனாலும், இங்க ராம் இருந்தா என்ன பண்ணிருப்பான், என்ன பேசிருப்பான், அப்படினு உன்ன பத்தி யோசிக்காம இருந்துருக்கவே மாட்டேன்; அவ்வளவு புடிக்கும்
.
ஒருவேளை நீ என்னோட வாழ்க்கைல இல்ல, தூரமா போயிட்டா, வேற பொண்ணை காதலிச்சு, உனக்கு
கல்யாணம் ஆகிட்டா, அப்படி இப்படின்னு யோசிச்சு, நானும் வேற ஒருத்தவன் கூட தான்
வாழனும் ; அப்படின்னு ஒரு நிலமை வந்தாலும் – என்னோட தேடல் ; ராம் மாதிரி பேசுற
பையன் வேணும் , ராம் மாதிரி என்னய சிரிக்க வைக்கிற பையன் வேணும் , ராம் மாதிரி
நான் பேசுறதை அவன் கவனிக்கணும், அப்படினு – அங்க கூட உன்னய தான் தேடிகிட்டு
இருப்பேன்.
இவ்ளோ பெரிய உலகத்துல, இப்படி எங்க போனாலும் உன்ன மாதிரி ஒருத்தனை தேடுற நான்,
ஏன் உன்னயே தேட கூடாதுன்னு தோணுது.
நீ எங்க வேணும்னா போ ! உன்னோட கனவ தேடி; உனக்கான வாழ்க்கைய தேடி !
நான் என் கனவ தேடி உன்ன கண்டுபுடிப்பேன்; உன்னதான் கரம்புடிப்பேன் !
எனக்கு உன்ன கல்யாணம் செஞ்சுக்கனும் ! உன்னோட வாழ்ந்தா, வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணுது ! உனக்கு இது IMMATURE ஆக தெரியலாம். ஆனா எனக்கு அப்படி
இல்ல ! உன்னோட ஒரு வாழ்க்கையை பல முறை படமா ஓட்டி பாத்துட்டேன் ! அதுல சந்தோஷம்
மட்டும் நெறஞ்சு இல்லனா கூட பறவா இல்லை, எனக்கு சந்தோஷம் தர நீ இருப்ப ; அது
போதும் எனக்கு !
எனக்கு மனசுல தோணுன எல்லாத்தையும் சொல்லிடனும் அவ்வளவு தான். உனக்கு என்ன
புடிக்குமா புடிக்காதா, ஏதும் எனக்கு தெரிய வேணாம்.
புடிச்சாலும் புடிக்கலனாலும், என் மனசுல தோணுனத நான் சொல்லிட்டேன். இதுனால நீ
என்ன வெறுத்து ஒதுக்கி என் மூஞ்சில முழிக்காம போனாலும் பறவா இல்ல. எனக்கு
சொல்லிட்டோம்ன்னு ஒரு முழுமை கிடைச்சிடும் அவ்வளவு தான்.
RAM… WILL YOU MARRY ME ?!!!
உனக்கு நான் முதல் காதலான்னு தெரியல; ஆனா எனக்கு
காதல்ன்னு சொன்னா நியாபகம் வர்றது உன் முகம் தான் ! என்னோட காதலை உன் கிட்ட எப்படி
சொல்லனும்ன்னு யோசிச்சேனோ, அப்டியே எழுதிருக்கேன் !
இப்படிக்கு உன்னை காதலிக்கும்
நான் !
(உன் – இஸ்வர்ணலதா)
இதை படித்து முடித்த உடன் வேலன் நிமிர்ந்து, இத எப்போ படிச்சீங்க அப்பா ? என்று ஆருவத்துடன் கேட்டான் ராமன்.
பஸ் ஏறி, எப்போ லதா கண்ணுக்கெட்டாம காணாத தூரத்துக்கு
நான் போனேனோ அப்போவே படிச்சுட்டேன்.
ஆனா லதாவே என் கனவுக்கு மரியாதை குடுக்குறப்போ நான் எப்படி அத மதிக்காம போக
முடியும் !
என்னோட பயணம் அங்கதான் தொடங்குச்சு, என் கனவை நோக்கிய பயணம். நெனச்ச
மாதிரி NATIONAL DEFENSE
ACADEMY ல SELECT ஆனேன். ACADEMY உள்ள போன அடுத்த நாள், நண்பர்கள் உதவியோட லதா கிட்ட என்
வாழ்க்கை நிகழ்வுகளை சொல்ல தொடங்கினேன்.
அவளும் அவளோட வாழ்க்கை நிகழ்வுகளை சொல்ல விரும்புவான்னு தோணுச்சு.
இரண்டு பேரும் E-MAIL மூலமா பேசிக்குவோம். தினமும் என்ன
நடந்துச்சின்னு DAIRY எழுதுற மாதிரி அவளுக்கு என்னோட
மின்னஞ்சல் போகும்.
அவளோட மின்னஞ்சல் எனக்கு வரும்.
இப்படி கல்யாணம் வரைக்கும், நாங்க ஒன்னா சேர்ந்து வாழ தொடங்கின
நாள் வரைக்கும் எங்களோட E-MAIL காதல் இன்டர்நெட்ல இன்பாக்ஸ்ல
இல்லறம் நடத்துது !
இது நல்லா போன அதே நேரத்துல உங்க தாத்தா மாணிக்கம், லதாவோட கல்யாண பேச்சை தொடங்கினாரு.
அப்போ உங்கம்மா காதல அவங்க வீட்ல போயி தைரியமா சொன்னா !
அப்படியா அம்மா ? தாத்தா கிட்ட நேர்ல சொன்னீங்களா !
இல்ல அங்கேயும் லெட்டர் தானா ? என்றான் வேலன்.
டேய் வேலா, உங்கம்மாவ யாருனு நெனச்ச ? தாத்தா கிட்டலாம் நேர்ல தான் சொன்னேன் என்றாள் லதா.
எப்படிமா சொன்னீங்க !
ஒரு நாள் காலைல தாத்தா நியூஸ் பேப்பர் படிச்சிட்டு இருந்தாரு, அப்போ அவர் கிட்ட நேரா போயி, அப்பா உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அப்படின்னு சொன்னேன்,
சொல்லுமான்னாரு, பட படன்னு எல்லாத்தையும்
சொல்லிட்டேன்.
"அப்பா நான் நீங்க ஆசை பட்ட மாதிரி, இஸ்வர்ணலதா B.D.S ; இதுவரைக்கும் நீங்க ஆச பட்ட மாதிரி, நீங்க சொன்ன மாதிரி ஒரு வாழ்கையை 26 வருசமா வாழ்ந்துட்டேன். இதுல
எனக்கு பிடிக்காத பல விஷயத்த உங்களுக்காக நான் செஞ்சுறுக்கேன்.
ஆனாலும் எனக்கு என்ன புடிக்கும், புடிக்காது, என்ன வேணும், வேணாம்னு நீங்க என்ன கேக்காம
செஞ்சது கடையாது !
இப்போ எனக்கு கல்யாணம் பண்ணனும்னு மாப்பிள்ளை தேடுறீங்க; எப்டியும் உங்களுகுன்னு ஒரு சில தராதரம் வச்சுறுப்பீங்க, அது படிதான் தேடுவீங்க.
இருந்தாலும் என்னோட மனசுல என்ன இருக்கோ அதை நான் சொல்லாம இருக்குற அளவுக்கு
நீங்க என்ன அந்நியமா வளர்க்குல. நான் ஒருத்தவரை விரும்புறேன். அவரை உங்க சம்மதத்தோட கல்யாணம்
பண்ணிக்கணும்ன்னு ஆச படுறேன். உங்க சம்மததுக்காக எத்தனை வருஷமானாலும் காத்திருக்க நாங்க தயார்".
அப்டினு சொல்லி முடிக்கிறதுக்குள்ள அழுகை வந்துடுச்சு.
அதுக்கு தாத்தா என்ன சொன்னாரு ? என்றான் வேலன்.
#வினித் மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக