உன்கரம் கோர்க்க,
மறையற்ற திருகாணியின் சுழற்சியாய்,
என் நாட்கள் கடந்திட,
கூட்டமற்ற தெருக்களின்,
திருப்பு முனைகளில்;
உன்பெயரேற்றிய கடைகளை கடக்கையில்,
முகமூடியோடு கடக்கும் பெண் நீதானென்று,
விழித்து பார்த்து;
ஏமார்ந்து கடக்கும் முடக்க நாட்கள்,
என்னை அடக்கம் செய்த பின்பும்,
முடிவிலி தான் !
#வினித்_மணிமாறன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக